Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அறநூல்களைப் படியுங்கள்

அறநூல்களைப் படியுங்கள்

அறநூல்களைப் படியுங்கள்

அறநூல்களைப் படியுங்கள்

ADDED : ஜன 04, 2011 08:01 PM


Google News
Latest Tamil News
*நற்பண்புகள் கொண்ட வாழ்க்கை மிகவும்

முக்கியமானது. இறைப்பணியாக நமது வாழ்க்கையை

மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன்

செயல்பட வேண்டும்.

* பஞ்ச பூதங்களால் ஆன இயற்கை

இறைவனின் சொரூபமாக விளங்குகிறது. அதன் தூய்மையைக் கெடுத்தால்,

நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை

பாழடைவதுடன் மனமும் மாசடையும். இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை

வழிபட்டவர்களாவோம்.

* அறவழி நூல்களைப் படிப்பதும், அனுபவம் மிக்கவர்

களுடன் பழகுவதும், ஆண்டவனிடத்தில் முழு

நம்பிக்கை வைப்பதும், அவதார புருஷர்களின்

உபதேசத்தைப் பின்பற்றுவதும், பக்தி மார்க்கத்தில் வெற்றி கிடைக்க உதவி செய்யும்.

*ஒரு தெய்வ உருவத்தைத் தேர்ந்தெடுத்துக்

கொள்ளுங்கள். பிறகு அதையே திரும்பத் திரும்ப

எண்ணிப்பாருங்கள். உங்கள் நினைவிலும் வாக்கிலும்

மீண்டும், மீண்டும் அந்தத் தெய்வ உருவமும், நாமமும் வரும். அதுவே மனதுக்கும், நாவிற்கும் இனிமை

இருக்கும்.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us